புதன், 4 அக்டோபர், 2017

பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் அறிவியல் மோசடிகளும்

-ஆர்.கண்ணன்
அணு ஆயுதங்கள், போதை மருந்து விற்பனைக்குப் பின் கொள்ளை லாபம் அளிக்கும் துறையாக மருந்து வியாபாரம் உள்ளது. மருந்து வியாபாரத்தில் உலகம் முழுவதுமே மருந்து சந்தையை பிடிப்ப தற்கு கடும்போட்டி நிலவி வருகிறது, வியாபார சந்தையை பிடிக்கும் ஒரே நோக் கத்தில் நியாயமான முறையில் வியாபாரம் செய்யும் போக்கை கைவிட்டு மக்களின் உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல் உயிரோடு விளையாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஒரு மருந்தினை சந்தையில் அறி முகப்படுத்தி விற்பனை செய்வதற்கு முன் அறிவியல் ரீதியாக முழு பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்த மருந்து ஏற் படுத்தும் விளைவுகள், பக்க விளைவுகள், அது எந்தளவுக்கு உடலுக்கு பாதுகாப் பானது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் அங்கீகரிக்கப் பட்ட தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனங் களிடமிருந்து அத்தாட்சி பெறுவது அவசி யம் என்று நடைமுறையில் உள்ள சட்டத் திட்டங்கள் கூறுகிறது. இந்த அறிவியல் ரீதியான அத்தாட்சி பெற மருந்து கம்பெனி கள் மருத்துவ நிபுணர்களையும், மருத்துவ பத்திரிகை ஆசிரியர்களையும் அணுகி அவர்களின் உதவியை பெறுவது உண்டு. சட்டத்திட்டங்களை காற்றில் பறக்க விட்டு “வேலியே பயிரை மேய்ந்த கதை யாக’ நடந்த பெரும் அறிவியல் மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது. இதன் பின்னணியில் உலக அளவில் அறிவியல் மோசடி செய்த பன்னாட்டு நிறுவனங் களின் லாபவேட்கை குறித்தும் நியாய மற்ற போக்கு குறித்தும் ‘தி ஹிண்டு’ ஏடு அண்மையில் தலையங்கம் தீட்டியிருந்தது.

மருத்துவ ஆராய்ச்சியில் புள்ளி விவ ரங்களை திரித்து கூறி சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி பற்றிய விவரமும், வெளியிட்ட மருத்துவ பத்திரிகையின் பெரும் மோச டியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெ ரிக்காவில் உள்ள மாஸ்சூட்செட்ஸ் (ஆயளளயஉாரளநவவள) என்னும் பகுதியில் ஸ்பினிங் பீல்டு(ளுயீinniபே குநைடன) என்னும் இடத்தில் அமைந்துள்ள பேஸடேட் மெடிக்கல் சென்டரில் பணியாற்றும் ஸ்காட் எஸ் ரீபென் என்ற பிரபல மருத்துவர் மருந்து ஆராய்ச்சி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பன்னாட்டு மருந்து கம்பெனி பைசர் (FIZER) நிறுவனம் தயாரித்த ஸ்டிராய்டு அல்லா வலி நிவாரண மருந்தான செலிகாப்சிக் வலி நிவாரணி மருந்தின் பரி சோதனை மற்றும் ஆராய்ச்சியில் தவ றான புள்ளி விவரங்களை அளித்து மோச டியில் ஈடுபட்ட குற்றத்திற்கு ஆளாகியுள் ளார். டாக்டர் ரீபென் 1996லிருந்து 2008ம் வருடம் வரை 12 வருடங்களாக மேற் கொண்ட ஆய்வின் அடிப்படையில் சமர்ப் பிக்கப்பட்ட 72 ஆய்வு அறிக்கையில் 21 ஆய்வு அறிக்கை, தவறான மற்றும் திரித்து கூறப்பட்ட புள்ளி விவரங்களை கொண் டுள்ளது ஆகும். இத்தகைய ஆராய்ச்சி யில், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் சார்ந்த அமைப்பு மற்றும் மருத்துவ பத்திரிகை ஆசிரியர் குழு ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய செயல் அறுவை சிகிச்கைக்குப்பின் அளிக்கப்படும் வலி நிவாரண மருந்தின் ஆராய்ச்சிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் முடநீக்கியல் மருத்துவ துறையில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ரீபென் அளித்த செலிகாப்சிக் உடன் இணைந்து மற்றொரு வலி நிவாரணி மருந்தினை அறுவை சிகிச் சைக்கு நோயாளிகளுக்கு பரிந்துரை செய் யப்படும் புதியமுறை நடைமுறைக்கு வந் தது. இதனை மல்டிமாடல் அனல்சஸிக் புரோடோகால் என்பர். இது பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக காலப்போக்கில் அறு வைசிகிச்சை நோயாளிக்கு பரிந்துரைக் கப்படும் அளவுக்கு பெரும் முக்கியத் துவம் பெற்றது. “டாக்டர். ரீபென் நடத்தி யுள்ள மோசடி தற்போது வெளிவந்த கார ணத்தால் மருத்துவத்துறையில் பெரும் தாக்கத்தையும், ஆராய்ச்சிக்கு பாதிப்பும் ஏற்படுத்தியுள்ளது” என்று அனஸ்தீஸீயா அனல்ஜிசியா பத்திரிகை தலைமை ஆசிரியர் ஸ்டில் ஷாபெர் கருத்து தெரி வித்துள்ளார்.

பன்னாட்டு மருந்து கம்பெனி மெர்க் (MERK) தயாரித்து விற்பனை செய்த ‘வயாக்ஸ்’ என்ற வலிநிவாரணி மருந்து இதய நோய் சம்பந்தமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தியதன் காரணமாக ‘வயாக்ஸ்’ மருந்து சந்தையிலிருந்து 5 வருடங்க ளுக்கு முன்பு வாபஸ் பெறப்பட்டது. மருந்து சந்தையிலிருந்து திரும்பப் பெறப் பட்டாலும் அது ஏற்படுத்திய சர்ச்சை ‘மெர்க்’ நிறுவனத்தை விட்டபாடில்லை. அண்மையில் மெர்க் நிறுவனம் நடத்திய அறிவியல் மோசடி வெளிச்சத்துக்கு வந் துள்ளது. இந்நிறுவனம் நடத்திய அறி வியல் மோசடி என்னவென்றால் தன் மருந்தின் வியாபார விற்பனைக்காக அறி வியல் நிகழ்வுகளை தாங்கிவரும் பத்திரிகை ஒன்றை இந்த நிறுவனமே அதை போலவே போலியாக வெளியிட் டுள்ளது என்பதே ஆகும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அனுபவ மிக்க பிரபல மருத்துவர் ஒருவர், மெர்க் நிறுவனம் அளித்த நான்கு விஞ்ஞான பத்திரிகைகளை ஆழமாக அலசி ஆராய்ந்துதான், இது அசல் அல்ல; போலி என்பதை கண்டுபிடித்தார்.

வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின்னர்தான் இந்நிறுவனம் தனக்கு எதி ராக திரும்பிய பிரச்சனைக்குரிய மருத்து வர்களை எவ்வாறு கவனித்தது என்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் சிலரின் மேற்படிப்புக்கு பணமும், அவர்கள் ஆய்வு செய்வதற்குரிய பணமும், அவர்கள் மருத் துவ பள்ளி நடத்துவதற்கு உதவியும் என்று சகலவிதத்திலும் மருத்துவர்களை கவ னித்துள்ளது. இந்நிறுவனம் விரித்த ‘அன்பு’ வலைக்குள் சிக்காத மருத்துவர் களை அவதூறு செய்தும், மிரட்டியும் சமாளித்துள்ளது.

இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இங்கிலாந்து நாட்டி லுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத் தின்படி ‘தி கார்டியன்’ செய்தித்தாள் வெளி யிட்டுள்ள விஷயமாகும். அந்த செய்தித் தாள் கூற்றுப்படி வியாக்ஸ் மருந்து சாப் பிட்டதன் காரணமாக இதயநோய் சம்பந்த மான கோளாறு ஏற்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த நோயாளிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்த அமைச்சர்களையே கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவர்களை ‘பல்டி’ அடிக்க வைத்த மெர்க் நிறுவனத்தின் செல்வாக்கு ஆகும்.

இந்திய நாட்டிலும் சன்பார்மா போன்ற மருந்து கம்பெனிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் லிட்ரஸோல் என்ற கடும் பக்க விளைவுகள் உள்ள கேன்சர் நோய்க்கு உண்டான மருந்தினை மகப் பேறு மருத்துவத்தில் பரிந்துரை செய்தது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறிவியல் அமைப்புகள், தொழிற்சங்கங் கள், அறிவியல் அறிஞர்கள், இடதுசாரி கட்சித் தலைவர்கள்ஆகியோர் இணைந்து நடத்திய எதிர்ப்பு இயக்கம் காரணமாக வாபஸ் பெறப்பட்டது.

ஆதாரம் : தி இந்து

(மார்ச் 26, மே 2010)


ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நவீன மருத்துவம் பற்றி பத்மபூஷன் டாக்டர் பி.எம்.ஹெக்டே


நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகளையும் தீமைகளையும் வேறு துறையைச் சார்ந்த யாராவது எடுத்துச் சொன்னால் நாம் என்ன செய்வோம்?

1. ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியே விட்டு விடுவோம்.
2. விஷயம் தெரியாமல் ஏதோ கூறுகிறார் என்று அலட்சியப்படுத்திவிடுவோம்.
3. பாவம், எந்த அரைகுறை மருத்துவரிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டாரோ என்று பரிதாபம் தெரிவிப்போம்.

ஆனால், அப்படி விஷயங்களைப் "புட்டுப்புட்டு வைத்தவர்' சாதாரண மனிதரல்ல. முன்னாள் மணிபால் பல்கலைக்கழகத் துணைவேந்தர். இங்கிலாந்தின் மிடில்ùஸக்ஸ் மருத்துவமனையில் இதய நோய்ப் பிரிவு பேராசிரியர். முதலமைச்சர்கள் உட்பட பல வி.ஐ.பி.களுக்கு மருத்துவ ஆலோசகர். பீகார் மாநில சுகாதார மருத்துவக் குழுவின் தலைவர். "ஜர்னல் ஆஃப் சயன்ஸ் அன்ட் ஹீலிங்' இதழின் முதன்மை ஆசிரியர். மருத்துவ சேவைக்காக இந்த ஆண்டு "பத்மபூஷன்' விருது பெற்றவர் டாக்டர் பி.எம்.ஹெக்டே.
கசப்பு மருந்தைச் சர்க்கரையில் தோய்த்துக் கொடுப்பதுபோல அவர் இதய பைபாஸ் சர்ஜரியையும், பிற தேவையற்ற அறுவைச் சிகிச்சைகளையும் பற்றி சிரிக்கச் சிரிக்கச் உரையாற்றினார். நம் உடலிலேயே சில மாற்றங்கள் இயற்கையாக உண்டாகி, சில கோளாறுகளைத் தானாகவே சரி செய்து கொள்கிறது என்றார்.

மருத்துவர்கள் ஸ்ட்ரைக் செய்த காலத்தில், இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே இருந்ததையும், அவர்கள் முழு மூச்சோடு பணியில் ஈடுபட்டபோது இறப்புகள் விகிதம் ஜிவ்வென்று அதிகரித்ததாகவும் புள்ளிவிவரங்களுடன் அவர் குறிப்பிட்டபோது சிரிப்பலை எழுந்தது.

ஹோமியோபதி மருந்துகளின் தன்மையை சிலாகித்துப் பேசினார். சில சித்த மருத்துவ முறைகளும், நீண்ட நாள் நோய்களிலிருந்து விடுதலை பெற்றுத் தந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். பிராணாயாமம், தியானம் முதலியவை எவ்வாறு மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவுகின்றன என்று விளக்கினார். மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக மருத்துவர்கள் சில மருந்துகளை "பிரிஸ்கிரிப்ஷனி'ல் எழுதிவிடுவதும், அதன் தீவிர விளைவுகள் மக்களை பாதிப்பதையும் எடுத்துச் சொன்னார் டாக்டர் ஹெக்டே.
(அவரை அறிமுகம் செய்து வைத்துப் பேசியவர், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி.) பிழைக்க வாய்ப்பு இல்லாத நோயாளிகளை எப்படி மெஷின்களில் பிணைத்து, வாட்டி வதைத்த பின், "எங்களால் முடிந்தவரை பார்த்துவிட்டோம்!' என்று "பில்'லோடு ஆசாமியை ஒப்படைப்பதை நாடகம் போல விவரித்தார் டாக்டர் ஹெக்டே.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரின் மனைவிக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததையும் "ஹெக்டே சொன்னதைக் கேட்காமல் போனது தவறு!' என்று அவர் வருந்தியதையும் குறிப்பிட்டார் டாக்டர் ஹெக்டே.

மனத்தில் உள்ள வெறுப்புகளை அகற்றினாலே பாதி நோய் பறந்துவிடும் என்றார். பாஸிட்டிவ் நினைப்புகள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என வலியுறுத்தினார்.
சொற்பொழிவை விஎச்எஸ் மையமும்,டேக் மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

(தினமணி ஞாயிறு கொண்டாட்டம் 21.02.2010)

(டாக்டர் பி.எம்.ஹெக்டே பற்றி மேலும் அறிய http://bmhegde.com)

புதன், 13 ஜனவரி, 2010

சிக்குன்குனியா அறிவீர்!

சிக்குன்குனியா என்றால் என்ன?

சிக்குன்குனியா ஒரு வைரஸ் நோயாகும். நோய் தொற்றுக்கு ஆளான, பகலில் கடிக்கும் மஞ்சள் காய்ச்சல் கொசுக்கள் (Aedes Aegypti) கடிப்பதால் மனிதர்களுக்கு பரவக்கூடியது. சிக்குன்குனியா வைரஸ் (CHIKV) முதன் முதலில் 1952-ம் வருடம் தான்ஸானியா நாட்டில் காய்ச்சல் கண்ட நோயாளி ஒருவரின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. அதுமுதல் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும் ஆசியாவின் பல பகுதிகளிலும் பெரும்பகுதி மக்களைத் திரும்பத்திரும்பத்; தாக்கியதில் சிக்குன்குனியா ஒரு கொள்ளை நோயாக அடையாளம் காணப்பட்டது. கிட்டத்தட்ட ஆப்பிரிக்கா முழுவதும் சுற்றிச்சுற்றி வரும் இந்த வைரஸ் பெரும்பாலும் கொசுக்களுக்கும் குரங்குகளுக்கும் இடையில் ஏற்படும் தொற்றினாலேயே பரவுவதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் இதற்குமுன் 1963, 1965 மற்றும் 1973-ம் ஆண்டுகளில் தாக்கியது.

வைரஸ் தொற்று ஏற்பட்டு 2 முதல் 12 நாட்களில் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சில சமயங்களில் வைரஸ் தொற்று உடல்நலக்குறைவாக மாறாமல் அமைதியாக உடலில் தங்கியிருப்பதும் உண்டு. இவ்வாறு ஏன் நிகழ்கிறது என்பது இதுவரை அறியப்படவில்லை. இவை அனைத்தும் மருத்துவ ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள்.

சிக்குன்குனியா குறிகள்

காய்ச்சல், மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம், பிடிப்பு, தசைகளில் வலி, தலைவலி, பலவீனம், குமட்டல், வாந்தி, அரிப்பு ஆகியவை சிக்குன்குனியா குறிகளாக உள்ளன.

காய்ச்சல் ஓரிரு நாட்களிலேயே சரியாகி விடுகிறது. மூட்டுவலி, பலவீனம் ஆகியவை வாரக்கணக்கில், மாதக்கணக்கில் நீடிக்கிறது. ஆண்டுக்கணக்கில் மூட்டுவலியுடன் அவதிப்படுவோரும் உண்டு.

சிகிச்சைகள்

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தில் சிக்குன்குனியாவுக்கென குறிப்பிட்ட மருந்துகள் எதுவுமில்லை. சிக்குன்குனியா வைரஸ் எதிர்ப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆன்டிபயாடிக் மருந்துகள், பெயின் கில்லர்கள் தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கவல்லவை.

சிக்குன்குனியாவுக்கு ஹோமியோபதி

சிக்குன்குனியா உட்பட அனைத்து வைரஸ் காய்ச்சல்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளவும் நலம் பெறவும் ஹோமியோபதி மருந்துகள் பெருமளவில் பயன்படுகின்றன. இது உலகளாவிய அளவில் கடந்த இரு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலுக்கு ஹோமியோபதி மருந்தை தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்ததும், வைரஸ் காய்ச்சல்களுக்கு ஹோமியோபதியில் மருந்துண்டு என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருப்பதுவும் அண்மைச் செய்திகள். நூற்றுக்கணக்கானோர் வைரஸ் காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியாவின் பின் விளைவுகளுக்கு சிகிச்சை பெற்று 100% முழுநலம் பெற்றுள்ளது எங்கள் மருத்துவமனையின் பெருமைக்குரிய அனுபவமும் சாதனையும் ஆகும்.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மர்மக்காய்ச்சல்களில் மர்மம் உள்ளதா?

டாக்டர் ச. அன்பழகன்
இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இத்தகைய காய்ச்சல்கள் சிக்குன்குனியாவை ஒத்திருப்பதாக மக்களில் சிலரும் சிக்குன்குனியாவே திரும்பவும் வந்துவிட்டதாக வேறு சிலரும் கருதுகின்றனர். தமிழக அரசோ சில இடங்களில் சிக்குன்குனியா உள்ளதாக ஒப்புக்கொண்டும் பல இடங்களில் இது சிக்குன்குனியா இல்லை வேறு வகையான வைரஸ் காய்ச்சல் என்றும் கூறிவருகின்றது. வைரஸ் காய்ச்சல் சுகாதார சீர்கேட்டினாலும் அதன் மூலம் உருவாகும் கொசுக்களினாலும் பரவுவவதாக அமைச்சரும் அதிகாரிகளும் கூறிவருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வைரஸ் காய்ச்சல் பாதித்து இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு வைரஸ் காய்ச்சலுக்கான ஒரே தீர்வாக ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பி செயல்படுகிறது. ஆங்கில மருத்துவமோ வைரஸ்களை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்கிறது. காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் கண்டுபிடிக்கப்படாதவரை இந்தக் காய்ச்சலுக்கு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுவதில்லை. வைரஸ் கண்டுபிடிக்கப்படாதவரை மர்மக்காய்சசலாகவே அது நீடிக்கிறது. வைரஸை கண்டுபிடித்து, காய்ச்சலுக்கு சிக்குன்குனியா, டெங்கு என பெயர் சூட்டுவிழா நடத்தி அதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்து அதனை நோயாளிகளுக்குக் கொடுத்தாலும் நோய் என்னவோ நிரந்தரமாக குணமாவதில்லை. காய்ச்சலுக்கான மருத்துவம் என்பது ஆங்கில மருத்துவத்தைப் பொருத்தமட்டில் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான முயற்சியாகவும் வலிக்கொல்லிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகவுமே உள்ளது. கடந்த பருவகாலத்தில் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு ஆங்கில மருத்துவத்தில் சிசிச்சை பெற்றவர்கள் பலர் இந்த பருவகாலம் வரை கை, கால் மூட்டுகளில் வலியுடன் அவதிப்பட்டுவருகின்றனர்.
நோய் கண்டறிவதில் ஆங்கில மருத்துவத்துக்கும் மாற்று மருத்துவங்களுக்கும் வேறுபாடு உள்ளது. ஆங்கில மருத்துவம் ஆய்வக சோதனைகளையும் வைரஸ்களையும் அடிப்படையாகக் கொண்டு நோயைக் கண்டறிகிறது. சித்தா, ஆயர்வேதம், யுனானி போன்ற மருத்துவங்கள் நாடிப்பரிசோதனையைக்கொண்டு நோயைக் கண்டறிகின்றன. ஹோமியோபதியிலோ காய்ச்சலுக்கான பெயர் அவசியமில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உடல், மனக்குறிகளைக் கொண்டும் தனித்துவக்கோட்பாட்டின் அடிப்படையிலும் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன. ஹோமியோபதியின் பார்வையில் இன்று பரவலாக காணப்படும் மர்மக்காய்ச்சகளில் எந்த மர்மமும் இருப்பதாக தெரியவில்லை. ஹோமியோ மருத்துவம் செய்வதற்குத் தெவையான குறி, குணங்களை தௌளத்தெளிவாக வெளிப்படுத்துவதாகவே இந்த மர்ம(?)க்காய்ச்சல்கள் உள்ளன. உதாரணமாக தலைவலி, குமட்டல், வாந்தி இவைகளின் தன்மைகளைக்கொண்டும், வலியானது சிறிய மூட்டுகளில் உள்ளனவா, பெரிய மூட்டுகளில் உள்ளனவா, நீண்ட எலும்புகளில் உள்ளனவா, தசைகளில் வலி உள்ளனவா எந்த நிலைகளில் வலிகள் கூடுகின்றன அல்லது குறைகின்றன, பசி செரிமானம், தாகம் ஆகியவை எவ்வாறு உள்ளன என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு அதற்கான சரியான மருந்தினைத் தேர்ந்தெடுத்து கொடுப்பதன் மூலம் காய்ச்சலையும் பிற துன்பங்களையும் விரைவாகவும் மென்மையாகவும் நிரந்தரமாகவும் ஹோமியோபதி மருத்துவத்தினால் நலமாக்கமுடியும். ஆகவே மாற்று மருத்துவங்களைக் கொண்டு - குறிப்பாக - உயரிய ஹோமியோபதி மருத்துவத்தைக் கொண்டு வைரஸ் காய்ச்சல்களை வெல்வதற்கு அரசும், பொதுமக்களும் முன்வரவேண்டும்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

மக்கள் நல்வாழ்வு - பொறுப்பை தட்டிக்கழிக்கும் தமிழக அரசு

எஸ். விஜயன்

கடந்த ஜூலை மாதம் படாடோபமாக நடைபெற்ற ஒரு அரசு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ‘‘உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்திட்டம்”. இத்திட்டப்படி ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் இருக்கும் மக்கள், சில உயிர் காக்கும் சிகிச்சைகளை செய்து கொள்ள முடியும். இத்திட்டத் தின் கீழ் வருபவர்கள் சுமார் 75 லட்சம் குடும்பங்கள் அடங்கும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. இதில் அரசின் 12 நலவாரியங் களில் பதிவு செய்யப்பட்ட 35 லட்சம் உறுப்பினர் களும் ஆண்டு வருமானம் 72000க்கு கீழ் உள்ள குடும்பங்களும் அடங்கும். இதற்கான செலவு ஆண்டுக்கு 517.307 கோடி ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு இத்தொகை ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும். இந்நிறுவனம், இதன் பயனாளிகளுக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்கும். இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்கான கட்டணத்தை ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் திரும்பக் கொடுக்கும். இத்திட்டப்படி 4 வருடங்களில் குடும்பம் ஒன்று ரூ1 லட்சம் வரை சிகிச்சை பெற அனுமதிக்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ 466 வீதம் 4 வருடங்களுக்கு 75 லட்சம் குடும்பங்களுக்கான பிரிமியத்தை அரசு செலுத்தும். குடும்பத் திற்கு 5 பேர் என்று கணக்கிட்டால் கூட இது தமிழகத்தின் சரிபாதி பேர் இத்திட்டத்தின் கீழ்வருவார்கள்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் - ஒரு கண்துடைப்பு

இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையில் (அரசாணை எண் 49) தமிழக அரசானது, மக்கள் நல்வாழ்விற்காக ஆண்டுதோறும் 2800 கோடி ரூபாய் செலவிடுவதாகவும் ஆனால் சில உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு நிதியுதவி செய்யுமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் ஆகியோருக்கு மனுக்கள் வந்த வண்ணம் உள்ளதால், அரசே நிதியளிக்கும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. Òபுதிய காப்பீட்டுத் திட்டத் திற்கு கலைஞர் பெயர் சூட்டுவதற்கு ஒரு அரசாணையும் (அரசாணை எண் 72) காப்பீட்டுத்திட்டம் அமலுக்கு வந்ததற்கு ஒரு அரசாணையும் (அரசாணை எண் 200) வெளியிடப் பட்டுள்ளது.

நமது நாட்டில் செயல்படும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அரசிடமிருந்து பலகோடி ரூபாய்களுக்கு வரிச் சலுகைககள் பெற்றுவருகின்றன. உதாரணத்திற்கு, இம் மருத்துவமனைகள் இறக்குமதி செய்யும் கருவிகளுக்கு இறக்குமதி வரி செலுத்தத் தேவையில்லை. இம்மருத்துவமனைகளுக்கு அரசே இலவசமாக இடம் வழங்கியுள்ளது. மின்கட்டணம் வியாபார நிறுவன கட்டணம் கிடையாது. தண்ணீருக்கு அதிக வரி செலுத்த வேண்டியதில்லை. இவைகளின் கட்டுமானத் திற்காக வாங்கிய பொருட்களுக்கு வரிச்சலுகை உண்டு போன்றவைகள் அடங்கும். இதற்கு மாறாக இவைகளில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளில் முப்பது சதவீதமான வர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அரசிற்கு கொடுத் துள்ளன. எனினும் இந்த உத்தரவாதம் நடைமுறைப்படுத்த வில்லை. நடைமுறை படுத்தப்படுகிறதா என்பதை கண் காணிக்கும் அமைப்பும் அரசிடம் இல்லை. உதாரணத்திற்கு சென்னை அப்பொல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நோயாளிகளில் உண்மை யாகவே முப்பது சதவீதம் பேர் ஏழைகளாகவும் இலவசமாகவும் சிகிச்சை பெறுகின்றனர் என்றால், அரசிற்கு எவ்வளவு பிரிமியம் தொகை மிஞ்சும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் நடைமுறைப்படுத்தப் பட்டால், அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மருத்துவ உதவி வேண்டும் என்ற மனுக்கள் ஏன் குவிய வேண்டும்? கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் அமைப்பை ஏன் அரசு இதுவரை ஏற்படுத்தவில்லை? இதைச் செய்திருந்தால் இத்தகைய காப்பீட்டுத் திட்டம் தேவையே இல்லையே! எனினும் இந்த காப்பீட்டுத் திட்டத்தை ஐந்து முக்கியமான அம்சங்களில் நாம் அலச வேண்டியதுள்ளது.

கடமையிலிருந்து வழுவிச் செல்லும் அரசு

முதலாவது அம்சம், மக்கள் நல்வாழ்வை பாதுகாப்பது அரசின் கடமையாகும் என்ற கருத்தில் ஏற்பட்ட மாற்றம். இந்த கடமையை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இயங்கும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் ‘அவுட்சோர்°’ செய்வது என்பதை ஏற்க முடியாது. தன்னிடம் உள்ள கட்டமைப்பை பயன்படுத்தி நல்வாழ்வு சேவைகளை இலவசமாக வழங்கும் வாய்ப்பு அரசிற்கு அதிகமாக இருக்கும் போது காப்பீட்டுப் பாதையை அரசு ஏன் தேர்ந்தெடுக்கிறது என்ற கேள்வி எழுகிறது. மக்கள் அனைவ ருக்கும் இலவசமான எளிதில் கிடைக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திட்டங்களை சரிவர நிறைவேற்றாமல், பொதுத்துறை மருத்துவ சேவைகளை குறை கூறுவதன் மூலம், தனியார் துறையை வளர்க்கவும் - கொஞ்சம் கொஞ்சமாக பொதுத்துறையை நாசப்படுத்தும் வேலையைச் செய்யவும், அரசுக்கு இது போன்ற காப்பீட்டுத் திட்டங்கள் உதவும். உலகமயமாக்கல் கொள்கைகளின் அடிப்படைக் கூறுகளான, அரசு, பொருளாதாரத்திலிருந்து விலகியிருத்தல், சேமநல நடவடிக்கைகளை அரசு கைவிடல், தனியார்மயமாக்கல் ஆகியவற்றிலிருந்து மக்கள் நல்வாழ்வு மட்டும் விலக்களிக்கப் பட்டிருப்பதாக உலக வங்கி போன்ற நிறுவனங்களே கூறியுள்ளன. கனடா, ஃபிரான்° போன்ற முதலாளித்துவ நாடு களில் கூட அனைத்து மக்கள் நல்வாழ்வுச் செலவுகளும் அரசே செய்கின்றது. கியூபா போன்ற சோசலிச நாடுகளில் சோசலிச குடியரசு அமைக்கப் பட்ட தினத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுச் செலவை முழுமையாக அரசு ஏற்றுக் கொண்டு ள்ளது. ஆனால் சோசலிசக் குடியரசு என்று தன்னை கூறிக் கொள்ளும் இந்தியாவில் நல்வாழ்வுச் செலவில் 80 சதவீதத்தை மக்கள் தங்கள் கைப்பணத்திலிருந்து செலவிடும் அவல நிலைதான் உள்ளது. இதனால், உலகிலேயே மிக அதிகமாக தனியார்மயப் படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுச் சேவைகளை கொண்ட நாடு இந்தியா என்ற மோசமான அந்த°தைப் பெற்று விட்டது. இது சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படை கோஷங்களில் ஒன்றான “எல்லோருக்கும் நல்வாழ்வு” என்பதிலிருந்து விலகிச் செல்வ தாகும். 1948இல் ஏற்கப்பட்ட போரே கமிட்டி பரிந்துரையின் அடிப்படை அம்சமான “காசு இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவம் மறுக்கப்படக் கூடாது” என்பதையும் நோய் சிகிச்சையை விட, நோய் தடுப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதையும் மறுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. முதலில் காப்பீட்டுத் திட்டம் மூலம் அரசே காசு கொடுப்ப தாகவும், பிறகு காசு கொடுப்பதையும் பற்றாகுறை யாக்கி (தற்போதும் அதுதான் நிலைமை) இறுதியில் காசு கொடுப்பதை அறவே நிறுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் படிப்படியாக செல்லும் போக்கே காப்பீட்டுத் திட்டப் பாதை. அரசிற்கும் மக்கள் நல்வாழ்விற்கும் சம்பந்தமில்லை, அவரவர்கள் மருத்துவச் செலவை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனோநிலையை பண்பாட்டு ரீதியாக உருவாக்கும் நோக்கம் கொண்டதே காப்பீட்டுப் பாதை மூலமாக நல்வாழ்விற்காக திட்டமிடுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காப்பீடு என்றொரு தொழில்

இரண்டாவது அம்சம், காப்பீட்டுத் திட்டம் செயல்படும் முறை பற்றியது. முதலில் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் யாதெனில் காப்பீட்டு உறுதி கொடுக்கும் நிறுவனம் பொதுத் துறையில் உள்ளதா தனியார் துறையில் உள்ளதா என்பது தான். மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் நம்நாட்டில் உண்டு. காப்பீட்டு வணிகத்தில் பொதுத்துறை ஈட்டும் லாபம் (உபரி என்று குறிப்பிடப்படுகிறது) அரசு கெள்கைகளின் அடிப்படையில் சமூகத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படும். தனியார்துறை ஈட்டும் லாபம் தனியாரின் சொத்துக் குவியலாக மாறும். இது இந்த துறை செயல்படுவதில் உள்ள ஒரு பொதுவான அம்சம்.

தமிழகத்தில் அரசின் உயிர்காக்கும் திட்டம் துபாயினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் °டார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுக்காக தான் ஆற்ற வேண்டிய சமூகக் கடமையினை நிறைவேற்ற ஒரு காப்பீட்டு நிறுவனம் அரசுக்கு தேவைப்படுமேயானால், தனியார் லாப நோக்கம் ஏதுமற்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தான் மக்கள் நலம் பேணும் அரசு தேர்வு செய்திருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை? குறைந்த விலைப்புள்ளி என்ற கருத்து இங்கே ஒரு தனியார் நிறுவனம் அரசு (மக்கள்) பணத்தில் லாபம் ஈட்டுவதை நியாயப்படுத்த கூறப்படும் ஒன்றாகத்தான் உள்ளது. மேலும் அரசு செலுத்தும் பிரிமியத் தொகை ரூ. 517.307 கோடி. (4 ஆண்டுகால ஒப்பந்தமாக இருந்தாலும் கூட) உயர்த்தப்படு வதற்கான சாத்தியக் கூறும் உண்டு. பொதுவாக இம்மாதிரியான திட்டங்களில் உரிமை கோரும் விண்ணப்பங்கள் ஒரு ஆண்டில் மிகவும் அதிகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தென்றால் அடுத்த ஆண்டு பிரிமியத் தொகை பரிசீலிக்கப்பட்டு உயர்த்தப் படும். இத்திட்டத்தின்படி °டார் காப்பீட்டு நிறுவன மானது 35 சதவீதத்தை லாபமாகவும் இயங்கு செலவாகவும் தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள 65 சதவீதத்தையே மக்களுக்கு வழங்குகிறது. இந்த 65 சதவீதத் தொகையானது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அவர்களின் லாபம், விளம்பரச் செலவு, ஆடம்பரங்கள், வல்லுனர்களுக்கு கொடுக்கும் அதீதமான ஆலோசனைத் தொகை போக மக்க ளுக்கு உண்மையாக போய்ச் சேர வேண்டிய தொகை எவ்வளவு என்று நம்மால் ஊகிக்க முடியும். அரசு செலவிடும் 517.307 கோடியில், நான்கு ஆண்டுகள் ஒப்பந்தப்படி 2069.204 கோடியில் பத்து சதவீதம் மக்களுக்கு பயனுள்ளதாக மாறினாலேயே ஆச்சரியம்தான். மீதமுள்ள 1800 கோடி தனியாருக்கு கைமாறுவது தவிர்க்க முடியாதது.

காப்பீட்டு நிறுவனமும், தனியார் மருத்துவமனைகளின் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மட்டுமே பயனாளிகள் சிகிச்சை பெறமுடியும். அரசு மருத்துவ மனைகளில் உள்ள கட்டண வார்டுகளை இதில் சேர்ப்பதற்கு அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இதில் பெருந்தொகை தனியார் நிறுவனங்களுக்கே செல்லும்.

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பொதுத்துறை அரசு மருத்துவ மனைகளைச் சேர்த்தாலும், எல்லாத் துறைகளும் இதில் பங்குபெற வாப்பில்லை. ஏற்கனவே அறிவித்த 51 வகை நோய்க ளுக்கும், அது சார்ந்த துறைகளுக்கு மட்டுமே, காப்பீட்டுத் திட்டம் அமலாகும். அதிலும் பொருளாதாரத்தின் அடித் தட்டில் உள்ள ஏழை எளியவர்களில் காப்பீட்டுத்திட்டத்தில் பயனடைபவர்கள்/ பயன் பெறாதவர்கள் அல்லது பயன்பெற தகுதியற்றவர்கள் என்ற இருவேறு நிலையில் சிகிச்சை அளிப் பதற்கான ஒரு மோசமான நிலைமை அரசு மருத்துவமனைகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. காப்பீட்டு நிறுவனம் அளிக்கும் நிதியைக் கொண்டு சம்பந்தப்பட்ட துறைகளை மேலும் விரிவுபடுத்தலாம் என்ற வாதமும் அரசு பிரிமியத்தொகையின் ஒரு பகுதியை அரசு மருத்துவமனைகள் மூலமாக திரும்பப் பெறும் என்ற நிலைபாடும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நேரடியாக செலவு செய்வதை விடுத்து தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம், தன்னுடைய நிதியை தாரைவார்த்துவிட்டு மீண்டும் ஒரு பகுதியை (?) திரும்ப பெறுவதற்கு முயற்சி செய்வதாக கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

இதே தொகையை அரசு தன்னுடைய பொதுத்துறை நல்வாழ்வு கட்டமைப்பின் மூலம் நேரடியாக செலவழித்தால் பலன் பன்மடங்கு இருக்கும் என்பது கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெறாத உயர்நிலைப் பள்ளி மாணவன் கூட கூறமுடியும். இன்னொரு முக்கியமான அம்சம், காப்பீட்டுத் தொழிலின் அடிப்படை விதிமுறை அனுமதிக்கும் ‘திட்டத்திலிருந்து விலகும் உரிமை’ கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்டி ருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 466 பிரிமியத்தை அரசு செலுத்துகிறது. அக்குடும்பமானது முதல் வருடத்திலேயே 1 லட்ச ரூபாய்க்கு சிகிச்சை செய்து கொண்டால் அடுத்த மூன்று வருடத்திலும் எதுவும் கிடைக்காது என்ற நிலையில் ஏன் பிரிமியம் செலுத்த வேண்டும்? அப்படிப்பட்டவர்கள் திட்டத் திலிருந்து விலகினால் ஏராளமான பிரிமியத்தொகை அரசுக்கு மிஞ்சுமே?

ஒரு குடும்பத்திற்கு 4 வருடத்திற்கு உயர்சிகிச்சைக்கு ஒரு லட்சம் போதுமா?
மூன்றாவதாக, 1 லட்சம் காப்பீட்டுத் தொகை நோயாளிகளுக்கு உரிய பலனளிக்குமா என்பது. உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 4 வருடத்திற்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான செலவில் ஒரு லட்சம் மட்டும் °டார் காப்பீட்டு நிறுவனம் வழங்கும். இத்திட்டத்தின் கீழ் 51 நோய்களை உள்ளடக்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு கிடையாது. இருதய சிசிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிக்சை உள்ளிட்ட நோய்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் பட்டியலில் விடுபட்ட நோய்கள் ஏராளம்.
பட்டியலில் உள்ள நோய்களுக்கான சிசிச்சையளிப்பதற்கே, வேறு சில ஆய்வு சிகிச்சைகள் தேவைப்படுகிறது. இதற்கும் இத்திட்டத்தில் இடம் இல்லை. உதாரணத்திற்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைக்கு இத்திட்டம் உதவாது. இருதய அறுவை சிகிச்சைக்கு மட்டுமே இது உதவிடும். அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் ஆஞ்சியோ ஆய்வை, இத்திட்டத்தின்படி செய்து கொள்ள முடியாது. ஆஞ்சியோகிராம் சோதனைக்குப்பின் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே, ஆஞ்சியோகிராம் சோதனைக்குரிய தொகையை இலவசமாக காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறமுடியும். ஆஞ்சியோகிராம் சோதனை, அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற முடிவை கொடுத்தால், இந்த சோதனைக்கான கட்டணத்தை காப்பீட்டுத்திட்டம் வழங்காது. இதேபோல, புற்றுநோய்க்கட்டி என்ற சந்தேகத்தின் பேரில் அதை உறுதி செய்ய தேவைப்படும பரிசோதனை களுக்கும் புற்றுநோய் என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, காப்பீட்டுத் திட்டத்தில் பணம் கிடைக்கும் (அதற்கும் உச்சவரம்பு உண்டு!) புற்றுநோய் அல்லாத பிற கட்டிகள்/நோய்கள் என்று தெரியவந்தால் அதற்கான செலவீனங்களை காப்பீட்டுத் திட்டத்தை நம்பி ஏமாறும் ஏழைக்குடும்பம், தன் வருமானத்திலிருந்தோ, கடன் வாங்கியோ செலவு செய்ய வேண்டும்.
இந்த 51 நோய்களிலும் சிகிச்சைக்குப்பின் செய்ய வேண்டிய சிகிச்சைக்கான செலவீனங்களும் இதில் அடங்காது. உதாரணத் திற்கு, ஒருநபர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்
னுயைடலளளை முறையினால் (தனியார் மற்றும் அரசு மருத்துவ மனையில்) சிகிச்சை பெற்று வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். (மாதச் செலவு சுமார் ரூ 2000) அந்த நபர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்து கொண்டாலும் அதற்குப்பின் குறைந்தபட்ம் 3 முதல் 5 வருடங்களுக்கு மாதத்திற்கு ரூ 3000 - 5000 செலவு செய்து தொடர் சிகிச்சையை பெற வேண்டியதிருக்கும்.

குறிப்பிட்ட 51 வகை நோய்களும், மருத்துவ நோய்கள் பெருமளவிற்கு விடுபட்டுள்ளன. சாதாரண வைர° நோய்களுக்கு (டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை) மலேரியா, எலிஜுரம் போன்ற எந்த தொற்று நோயும் (சமீபத்திய பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட) இதில் சேர்க்கப்படவில்லை. இதுபோன்ற நோய்களால் இறப்பவர் எண்ணிக்கை, பட்டியலிடப்பட்டுள்ள எல்லா அறுவை சிகிச்சை நோய்களால் இறப்பவர் களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். இதைத்தவிர தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நோய்களான சக்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் ஆகியவற்றிற்கான சிகிச்சையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியாது.
இந்த 51 நோய்களுக்கும் சிகிச்சைக்கான செலவு ஒரு லட்சத்திற்குள் முடிந்துவிடும் என்ற உத்தரவாதமும் கிடையாது. ஒரு லட்சத்திற்கு மேல் ஆகும் கூடுதல் தொகையை நோயாளி தனது சொந்த பணத்திலிருந்துதான் செலவு செய்ய வேண்டும். அதற்கான வசதி ஆண்டுக்கு 72000 ரூபாய் வருமானம் ஈட்டும் குடும்பத்தில் எப்படி இருக்க முடியும்? சிகிச்சை பெறும் ஒரு சிலர் அரசை வாழ்த்துவதை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப் படுத்திக் கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கைகள் இத்திட்ட த்தின் வெற்றி என்ற தோற்றத்தை உருவாக்க உதவுமே தவிர உண்மையான வெற்றியை இது பிரதிபலிக்காது. சிகிச்சையையும் துவக்கி நடுவிலும் கைவிட முடியாமல் கடனாளியாகும் நிலைக்கே இவர்கள் தள்ளப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் சராசரியாக 5 பேர் என்று கணக்கிட்டால் (கணவன்-மனைவி, பெற்றோர் மற்றும் ஒரு குழந்தை) கூட உயிர்காக்கும் உயர் சிகிச்சை தேவைப்படுவர் நான்கு ஆண்டுகளில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியாது. இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலமைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் ஒருலட்சத்திற்குள் செய்துவிட முடியும் என்பது சற்று கடினமான விஷயம்தான். இத்திட்டம் ஜூலை 2009இல் அமலுக்கு வந்தது 2012ஆம் ஆண்டு சிகிச்சை பெறுபவர் அன்றுள்ள விலைவாசி நிலைமையில், இத்திட்டம் யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற நிலையை அடைந்துவிடும்.

இதைவிட முக்கியமானது, போரே கமிட்டியின் பரிந்து ரையின் முக்கிய அம்சமான நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது கைவிடப்பட்டு நோய்வந்த பின்பு செலவீனங்கள் அதிகமாகக்கூடிய அறுவைசிகிச்சை களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் தவறான அரசின் சுகாதார அணுகுமுறை இதிலும் தொடர்கிறது. உதாரணமாக சுத்தமான குடிநீரும், கொசு ஒழிப்புத் திட்டங்களும், சத்துணவு கிடைக்கப் பெறல் ஆகியவைகளால் தொற்று நோய்களை தடுக்க முடியும். இருதய நோயைத் தடுக்காமல் அதற்கான அறுவை சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவதை வைத்து அரசின் பொதுத்துறை சுகாதாரக் கொள்கைகளானவை, தனியார் மருத்துவ மனைகளுக்கும், மருந்து உற்பத்தியாளர்களுக்கும் சந்தை அமைத்துக் கொடுக்கும் பணியை செய்யும் நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியதிருக்கிறது.

நல்வாழ்வு காப்பீட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்பட முடியுமா?

நான்காவது, இந்த தனியார் நிறுவனங்களின் செயல்பாடு குறித்த அம்சம் இந்த நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனங்கள் பயனாளி களை எவ்வாறு ஏமாற்றி வருகிறது என்பதை மையமாக வைத்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மைக்கேல் மூர் தயாரித்துள்ளார். 2006இல் இவர் இயக்கிய “சிக்கோ” என்ற ஆவணப்படமானது, உலகின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்தப்படத்தை இயக்கும் யோசனை மைக்கேல் மூரின் மூளையில் உதித்ததும், நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனங்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் விபரங்களை மின் அஞ்சல் மூலமாக தனக்கு அனுப்புமாறு ஒரு விளம்பரத்தை கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள் 1100க்கும் அதிகமானோர் பதில் அனுப்பியிருந்தனர், ஒரே நாளில் 12000 பேரும் ஒருவாரத்திற்கு ஒன்றரை லட்சம் பேரும் மின் அஞ்சல் அனுப்பியிருப்பதாக மூர் கூறுகிறார். ஒவ்வொரு நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்திலும் சிகிச்சை பெற்றவர் அனுப்பும் விண்ணப்பத்தை நிராகரிப்பதற் கென்றே விசேஷ அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த விசேஷ அதிகாரிகளில் ஒருவர் “என்னுடைய செயல்பாடும், ஆண்டுச் சம்பள உயர்வும் நான் எவ்வளவு விண்ணப்பங்களை நிராகரித் திருக்கிறேன் என்பதிலும் எவ்வளவு தொகையை மறுத்திருக் கிறேன் என்பதைப் பொறுத்ததுதான்” என்று வெளிப்படை யாகக் கூறுகிறார்.
1960களில் அமெரிக்காவில் நடைபெற்ற முக்கியமான விவாதங்களில் ஒன்று மக்கள் நல்வாழ்வை சமூகமயமாக்குவது என்பதே! மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதை ஒரு சோசலிச கருத்தோட்டமாக பிரச்சாரம் செய்து எப்படி முறியடித்தனர் என்பதையும் இப்படம் கூறுகிறது. தற்போது அமெரிக்காவில் காப்பீட்டுத் திட்டம் இல்லாத முப்பது சதமான பேருக்கு அரசே பிரிமியம் வழங்கி காப்பீட்டுத் திட்டத்திற்குள் சேர்க்க வேண்டும் என்று ஒபாமா கூறியிருக்கும் கருத்திற்கு, வலது சாரிகள் இலவச பிரிமியம் என்ற கோட்பாட்டை எதிர்ப்பதையும், காப்பீட்டு பாதையே கூடாது, அரசே எல்லா நல்வாழ்வு சேவைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று நல்வாழ்வு ஆர்வலர்கள் கூறுவதுமான சர்ச்சை தற்போதும் நடைபெற்று வருகிறது.

இத்தகைய தில்லுமுல்லுகளை சுட்டிக்காட்டிய பொழுது, இத்திட்டத்தின்படி அரசு செலுத்தும் பிரிமியம் தொகையில் 65 சதவீதத்தை கண்டிப்பாக பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என்று அரசு தரப்பில் இருந்து பதில் வருகிறது. இவர்கள் வெளியிட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் அனைத்தும் தனியார் மருத்துவமனைகளாகவே உள்ள நிலையில், இந்த 65 சதவீத செலவை எட்டுவதற்கு ஸ்டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்காலத்தில் ஒரு பெரிய மோசடி நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அரசு தரப்பிலும் இது போன்ற கேள்விகளுக்கு பதில்கள் வந்த வண்ணம் உள்ளது உதாரணத்திற்கு அரசு அலுவலர்களுக்கு இதே °டார் நல்வாழ்வு காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், இதுவரை அரசு ஊழியர்கள் 154.22 கோடி ரூபாயை பெற்றிருக்கிறார்கள் என்றும் இந்நிறுவனத்திற்கு அரசு செலுத்திய பிரிமியம் வெறும் 121.7 கோடிதான் என்றும் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 கோடி (விண்ணப்பத் தொகை - பிரிமியத் தொகை + இயங்கு செலவு) நஷ்டமடைந்திருப்பதாக அரசு தரப்பு கூறுகிறது. நடைமுறையில் நஷ்டமடைவதாக கூறும் வியாபார நிறுவனங்கள் கூறும் நஷ்டம் என்பது மதிப்பீட்டு நஷ்டம். வருமானம் மற்றும் செய்யப்பட்ட உண்மைச் செலவு இதற்கு இடையில் இருக்கும் நஷ்டமே பணநஷ்டம். ஒரு இயந்திரம் வாங்கினால் 30 சதவீதத்தை தேய்மானமாக செலவில் எழுதி விட்டாலும் நடைமுறையில் 30 சதவீதம் தேய வேண்டும் என்று அவசிய மில்லை. ஆனால் பண நஷ்டத்தில் ஒரு நிறுவனம் இயங்க முடியாது. காப்பீட்டு நிறுவனம் அடைந்ததாக அரசு கூறும் நஷ்டம் என்பது பண நஷ்டமாகும். இது ஒரு வியாபாரத்தில் நடைபெறவே முடியாது. எனினும் துணிச்சலாக இத்தகைய பதில்களை அரசு கூறிவருகிறது.

அரசே ஒரு காப்பீட்டு அமைப்புதான்

ஐந்தாவது முக்கியமான அம்சம்: மக்கள் நல்வாழ்விற்கான அரசின் திட்டமிடல் பற்றிய கேள்வி. அரசு என்பது என்ன? அது மக்கள் அமைப்புதான். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லை என்றால் அதற்கான செலவில் எனக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் மனிதன் சமுதாயமாக வாழ்கிறவன். எனவேதான் மக்களின் நல்வாழ்வு செலவை மொத்தமாக மதிப்பிட்டு அதற்காக திட்டமிடும் பொறுப்பு அரசிடமே உள்ளது. இதற்காக வரிவசூலிக்க அரசுக்கு உரிமை உண்டு. வரி செலுத்துபவர்ககளில் பலர் அவர்கள் செலுத்திய வரித்தொகையளவிற்கு சிகிச்சை பெற்றிருக்க வேண்டியதில்லை. எனினும் எனக்கு நோய் வந்தால் அரசு கவனிக்கும் என்ற உத்தரவாதமே, நோய் வருவதற்கான தடுப்பு அரணாக செயல்படும். இன்றும் கூட நாம் செலுத்தும் வரிகளில், செலுத் தப்பட்டதற்கான காரணத்தை நாம் அனைவரும் அனுபவிப்பது கிடையாது. எனினும் நாம் வரி செலுத்துகிறோம். அது நமது சமுதாயக் கடமை அது நமக்கு ஒரு பாதுகாப்பை தருகிறது. இந்த வகையில் அரசே ஒரு காப்பீட்டு அமைப்புதான். எனினும் ஏற்றதாழ்வான வருவாய் ஈட்டும் மக்கள் கூட்டத்திடம் எல்லோரும் சரிசமமாக அனைத்து விஷயங்களுக்கும் வரி செலுத்துங்கள் என்று வலியுறுத்தமுடியாது. யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை அன்றைக்குள்ள சூழ்நிலையில் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் இந்த கருத்தோட்டத்தில் ஒரு தலைகீழ் மாற்றம் உலகமயமாக்கல் கட்டத்தில் ஏற்பட்டு விட்டது. “நான் ஏன் அடுத்தவனுக்காக செலவு செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தை மக்களின் ஆழ்மனதில் பதிய வைத்த பண்பாட்டு வேலையை உலகமயமாக்கல் செய்து விட்டது. ஒவ்வொருவரும் மக்கள் கூட்டத்திடமிருந்து தனி நபர்களாக்கப்பட்டுள்ளனர். கூட்டமாக பயன்படுத்தும் மேஜை தொலைபேசியிலிருந்து, ஒருவர் மட்டுமே பயன்படுத்து கைபேசி பண்பாட்டிற்கு உலகமயமாக்கல் கொண்டு வந்து விட்டது. ஆகவே பயனாளி மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து விட்டது. இந்த கோட்பாட்டை மக்கள் நல்வாழ்விற்குள் நடைமுறையில் புகுத்த முடியாது. அப்படிச் செய்தால் மனிதனின் அடிப்படை மனிதாபிமான உணர்வு கேள்விக்குள்ளாக்கப் பட்டுவிடும். அப்படியும் புகுத்தினால் மக்கள் கூட்டமே அழிய நேரிடும். இந்த முரண்பாட்டைபும் லாப நோக்கத்திற்காக பயன்படுத்தும் படைப்பாற்றல் புத்தி உலகமயமாகக்கல் கொள்கைகளுக்கு இருப்பதால்தான் நல்வாழ்வு காப்பீட்டு அமைப்புமுறை உருவாக முடிந்தது. இது மக்கள் நலனில் அரசின் கடமையை சுருக்கிவிடும் வேலையை செய்து வருவதால், அத்துணை காரணங்களுக்கும் அடித்தளமாக விளங்குவது உலகமயமாக்கலும் லாபவெறியும் என்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உடனடியாக அரசு செய்ய வேண்டியது

¨ அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டத்தை உரிய முறையில் பரிசீலனை செய்து, எல்லா உயிர்க்கொல்லி நோய்களையும் சேர்த்து அதற்கான சிகிச்சைக்கு முழுமையான மற்றும் தொடர் சிகிச்சைகளுக்கு வேண்டிய நிதியை திரட்டி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்க ளோடு தொடர்பு கொண்டு ஒரு மாற்றுத் திட்டத்தை அறிவிக்க அரசு முன்வரவேண்டும்!

¨ அரசு தன் கடமையிலிருந்து நழுவி, இதுபோன்ற காப்பீட்டுத் திட்டங்களை நம்பியிராமல், அரசு பொதுத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்தி எல்லா சிகிச்சை களைபும் இலவசமாக எல்லாருக்கும் வழங்க வேண்டும்!

¨ இதுபோன்ற திட்டங்கள் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடிந்துவிடும்; தொடர்ச்சியான சிகிச்சைக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இது போன்ற திட்டடங்களை கைவிட வேண்டும்!

¨ உயர்சிகிச்சையை வணிகமயமாக்கிடும் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகளை உரிய முறையில் ஆய்வு செய்து அவர்கள் அரசிடம் இருந்து பெறப்பட்ட வரிச் சலுகைகளுக்கு இணையான இலவச சிகிச்சையை அரசு பரிந்துரைக்கும் ஏழைகளுக்கு அளிப்ப தற்கான ஒரு கட்டமைப்பை அரசு உருவாக்க வேண்டும்!
உடனடியாக சமூக ஆர்வலர்களும் பொறுப்புள்ள எதிர்கட்சிகளும் செய்யவேண்டியது
இத்தகைய காரணங்களினால் சமூக உணர்வு படைத்தவர்கள் தனது கடமைகளிலிருந்து நழுவிச் செல்லும் அரசை அதனுடைய பாதையில் திரும்பப் பயணிப்பதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும். மக்கள் நல்வாழ்வை காப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுப் பாதையானது அரசு தன்னுடைய கடமையிலிருந்து வழுவிச் செல்வதையே பிரதிபலிக்கிறது. காப்பீட்டுப் பாதையும் எதிர் காலத்தில் ஒரு பெரிய மோசடி நடக்கவிருப்பதற்கான அறிகுறி உள்ள பாதை என்பதாலும், மக்கள் நல்வாழ்வு மோசமடைவதை தடுக்க திராணியற்றது என்பதாலும் இத்தகைய நடைமுறைகள் உடனடி பலனை மட்டும் வைத்து தீர்மானிக்காமல் நீண்டகால அடிப்படையில் பலன்தராது என்பதால் கடுமையாக எதிர்ப் பதற்கு சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும். அரசுடைய நலத் திட்டம் என்று இது அங்கீரிக்கப்பட்டு விட்டதால், இதை விமர்சித்தால் நாம் தனிமைப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் இதை எதிர்க்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்குவதை பொறுப்புள்ள எதிர்கட்சி களும் தவிர்க்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் செப். 2009

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

திருடனின் கையில் சாவி...!

உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா? தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான். அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்று கூடக் கூறப்படுவதுண்டு. மருந்து உற்பத்தி யாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.

கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல் லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், “பரிசு” என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டவைக்கின் றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித்தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபச்சாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச்செல வையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள் கின்றன.

அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பி னர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்து களை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய “ஃபைசர்” நிறுவனம்,
வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி “வையோக்ஸ்” என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர் விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்ட வர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்..

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள் தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கை வரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித் தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற் பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...

ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக் களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?

‘தினமணி’ தலையங்கம் (17.9.2009)

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

சிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை

ச. அன்பழகன்,
தஞ்சை நலம் மருத்துவமனை, தஞ்சாவூர்

சிறுநீர்க்கல்

பெயர் விளக்கம் : சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகம் என்ற தமிழ்ச்சொல் பொதுவாக மூத்திரக்காய் (Kidney), வடிகுழாய் (Ureter), சிறுநீர்ப்பை (Bladder) ஆகிய அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஆனால் வழக்கில் சிறுநீரகம் என்ற சொல் மூத்திரக்காயை மட்டும் குறிப்பதாகப் பயன்படுவதால் இங்கு சிறுநீர்க்கல் என்ற சொல் Renal Calculi என்ற ஆங்சிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர்க்கல் எவ்வாறு உருவாகிறது?

சிறுநீர்க்கற்களை உருவாக்கும் மூலப்பொருட்கள் பல இருப்பினும் அவற்றுள் முதன்மையான கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் ஆகியவை பொதுவாக சிறுநீரில் கரைந்து கழிவுகளாக வெளியேறுகின்றன. ஆனால் சிலரின் சிறுநீரில் இந்தக் கழிவுப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் முழுவதுமாக சிறுநீரில் கரைவதில்லை. கரையாத கழிவுகள் சிறுநீர் உறுப்புகளில் படிகங்களாகத் தங்கி. பின்பு படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக உருவாகின்றன. மூத்திரக்காய், வடிகுழாய், சிறுநீர்ப்பை என எந்த இடத்திலும் கற்கள் உருவாகலாம்.

வடிவமும், அளவும் : கற்கள் பல வடிவங்களிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக மாறுவதால் பல கூர்முனைகளைக் கொண்டுள்ளன்.

கல்லின் வரலாறு :

1. மனித உடலில் சிறுநீர்க்கல் எப்பொழுது உருவாகத் தொடங்கியது என்ற ஆராய்ச்சிகளில் மிகவும் தொன்மை( ! ) வாய்ந்த ஆதாரமாகக் கருதப்படுவது கி.மு. 4800 காலத்திய எகிப்து நாட்டின் மம்மியில் இருந்து பெறப்பட்டதுதான்.

2. சுஷ்ருதா என்ற இந்திய மருத்துவர் கி.மு.12ஆம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை செய்து கல்லை நீக்கியதாக மருத்துவ இலக்கியங்களில் காணப்படுகிறது.

3. கி.பி.1879-ல் ஹெய்னிகி என்ற மருத்துவர் கல்லுக்கான அறுவை சிகிச்சை செய்தார்.

4. கி.பி.1800 களில் ஹோமியோபதி மருத்துவம் பயன்பாட்டுக்கு வந்தது. இன்று சிறுநீர்க்கல் சிகிச்சையில் பயன்படும் மருந்துகள் யாவும் அன்றே பயன்பாட்டில் இருந்தன.

5. PCNL எனப்படும் Percutaneous Nephrolithotomy எனப்படும் என்டோஸ்கோப்பி முறை 1976-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. தற்போது பெருமளவு நடைமுறையிலுள்ள ESWL எனப்படும் Extracorporeal Shock Wave Lithotripsy முறை 1980-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறுநீர்க்கல் கணக்கெடுப்பு :

மொத்த மக்கள் தொகையில் 12% பேர் தங்களது வாழ்நாளில் ஏதோவொரு கட்டத்தில் சிறுநீர்க்கல்லால் பாதிக்கப்படுகின்றனர்.

12% ஆண்களும், 5% பெண்களும் தங்களது 70-வது வயதில் சிறுநீர்க்கல் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

சிறுநீர்க்கல் நோயாளிகளில் 50% பேருக்கு 5 முதல் 10 வருடங்களில் திரும்பவும் கல் உருவாகிறது.

பெரும்பான்மையான கல் நோயாளிகள் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 வயதிற்குமேல் கற்களால் பாதிக்கப்படுபவர்கள் குறைவே.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 1000 நோயாளிகளில் 7லிருந்து 10 பேர் சிறுநீர்க்கல்
நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியாவில் சுமார் 70 லட்சம் சிறுநீர்க்கல் நோயாளிகள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஆயிரத்துக்கு ஒருவர் கல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

மூத்திரக்காயின் (Kidney) பணியும் கற்களும் :

மனிதனின் வயிற்றின் பின் பகுதியில் தண்டுவடத்தின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக்காய்கள் அமைந்துள்ளன. அவரை வடிவில் உள்ள இந்த மூத்திரக்காய்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களைப் பிரித்து சிறுநீராக மாற்றுகின்றன. இந்தப் பணியை மூத்திக்காயின் இயங்கு பகுதியான நெப்ரான்கள் செய்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 180 லிட்டர் இரத்தம் நெப்ரான்களைக் கடந்து செல்கின்றன.

கற்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை ஏற்கனவே கண்டோம். அவ்வாறு உண்டாகும் கற்கள் மூத்திரக்காயிலேயே தங்கிவிடலாம் அல்லது அங்கிருந்து நகர்ந்து சென்று வடிகுழாயிலோ, சிறுநீர்ப்பையிலோ தங்கிவிடுவதும் உண்டு. அவ்வாறு தங்கியிருக்கும் கற்கள் எவ்வித அறிகுறியும் இல்லாமல் ஒரே இடத்தில் பலவருடங்கள் கூட இருப்பதுண்டு. பல நேரங்களில் கற்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து இரத்தப்போக்கும், அந்தப் பகுதியைச் சுற்றி சீழ்பிடிப்பதும் நிகழ்கிறது. இதனை சிறுநீரிலிருந்து நேரடியாகவோ, பகுப்பாய்வு செய்வதோ அறியலாம் 2மி.மீ முதல் 5 மி.மீ வரை பருமனுள்ள கற்கள் தானாகவே சிறுநீருடன் வெளியேறிவிட வாய்ப்புண்டு.

சிறுநீர்க்கல்லின் அறிகறிகள் : மூத்திரக்காயிலோ, வடிகுழாயிலோ இருக்கும் கற்கள் சிறுநீர் வழியை அடைக்காதிருக்கும் வரை கற்களுக்கான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. சாதாரணமாக கற்களின் இருப்பு கீழ்காணும் காரணங்களால் வெளிப்படுகினறது.

வழக்கமான முழு உடல் பரிசோதனை.
முதுகில் மந்தமான தொடர்வலி.
சிறுநீர்ப்பாதை அழற்சி.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
சிறுநீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் அல்லது இரண்டும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்.
சிறுநீர்க்கல்லுக்கே உரித்தான தீவிரவலி, வலியின் தன்மை பிரசவ வலிக்கு ஒப்பாக இருக்கும். வலி முதுகிலிருந்து இடுப்புக்கு பரவும், வலியுடன் குமட்டல், வாந்தி, வயிறு உப்பிசம் ஆகியவை காணப்படும்.

சிறுநீர்க்கல் வலியானது கற்கள் இருக்கும் இடம், நிலை ஆகியவற்றைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் கல்லின் பருமனுக்கும் வலியின் கடுமைக்கும் சம்பந்தமில்லை.

ஆய்வக சோதனையில் சிறுநீரில் படிகங்களும், இரத்த அணுக்களும், சீழும் காணப்படும்.

X-Ray, KUB, Scan மூலம் கற்கள் இருக்கும் இடத்தையும், கற்களின் பருமனையும் அறிய முடியும்.

எச்சரிக்கை : சிறுநீர்க்கற்கள் மூத்திரக்காயில் நீண்ட காலம் தங்கியிருந்து அதனை சீழ் பிடிக்கச் செய்து செயலிழக்கச் செய்யும் அபாயமும் உண்டு.

ஹோமியோபதி பார்வையில் கற்களும் சிகிச்சையும்

ஹோமியயோபதி பார்வையில் உருவாகும் கேள்விகள் :

1. ஆயிரம் பேரில் பத்து பேருக்கு மட்டும் ஏன் கற்கள் உருவாகின்றன?

2. ஒரே வகையான சுற்றுச்சூழல், ஒரே மாதிரியான குடிநீர், ஒரே வகையான உணவுப்பழக்கம் உள்ளவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கற்கள் உருவாவதேன்?

3. ஒரே குடும்பத்தில் பலர் இருந்தும் ஒருவருக்கு மட்டும் ஏன் கற்களின் பாதிப்பு?
இந்தக் கேள்விகள் ஹோமியோபதியில் அடிப்படையானவை.

மனிதனின் உயிராற்றல் (Vital Power) மாறுபாடு அடையும்போது மனம் உடல் இயக்கங்கள் மாறுபாடு அடைகின்றன. இந்த மாறுபாடுகளே நோய்க்குறிகளாக வெளிப்படுகின்றன. உயிராற்றல் பலமிழந்துள்ள மனிதர்களை மட்டுமே நோய்கள் தாக்குகின்றன. எல்லா நோய்களும்
( சிறுநீர்க்கல் உட்பட) எல்லோரையும் தாக்குவதில்லை. எனவேதான் ஹோமியோபதி நோயுற்ற மனிதனை உற்று நோக்குகிறது. ஏன் இவரை இந்த நோய் தாக்கியிருக்கிறது என்று ஆராய்கிறது.

சிகிச்சை முறை : “உயிராற்றல் சரிசெய்யப்பட்டால் உடல், மன இயக்கங்கள் சீரடைகின்றன. உடல் பழைய நிலைக்கு அதாவது ஆரோக்கிய நிலைக்கு திரும்பி தானாகவே தன்னை அண்டியிருக்கும் நோய்களை விரட்டியடிக்கிறது”

ஹோமியோபதி மருந்துகள் உயிராற்றலை மேம்படுத்துகின்றன. அதன் மூலம் உடல் நலத்தை மீட்டுத்தருகின்றன. இது எல்லா நோயுற்ற மனிதருக்கும் பொருந்தும். சிறுநீர்க்கற்கள் இதற்கு விதிவிலக்கல்ல.

எவ்வித அறிகுறியும் இல்லாமல், எக்ஸ்-ரே, ஸ்கேன் பரிசோதனை மூலம் அறியப்பட்ட கற்களை வெளியேற்றுவதற்கான சிகிச்சையும், கற்களின் வலியுடன் மருத்துவரிடம் வரும் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் வெவ்வேறு வகையில் அமையும். அதாவது,

1. வேறு காரணங்களுக்காக ஒரு நோயாளி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும்போது தற்செயலாக அவருக்கு தற்கள் இருப்பது தெரியவந்து, அத்தகைய நோயாளி ஹோமியோபதி மருத்துவரிடம் வந்தால், அவரிடம் அவருடைய உடல்நிலை பற்றிய அனைத்து விபரங்களும் கேட்டறியப்படுகிறது. சிறுநீர்க்கல் மட்டுமல்லாது அவர் உடலில் உள்ள அனைத்து கோளாறுகளையும் கேட்டறிந்து, ஒட்டு மொத்த குறிகளின் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவருடைய உயிராற்றல் தூண்டப்படுகிறது அல்லது மேம்படுத்தப்படுகிறது. சீர் செய்யப்பட்ட உயிராற்றல் உடலின் இயக்கங்களை சீர் செய்கிறது. உடல் இயக்கங்கள் சீரடையும் போது அனைத்து நோய்க் குறிகளும் உடலிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன. பின்பு கற்களுக்கு மட்டும் அங்கென்ன வேலை? அதுவும் உடலை விட்டு வெளியேறும்.

2. சிறுநீர்க்கற்களின் தீவிர வலியுடன் வரும் நோயாளியைப் பொருத்தவரை, அவருக்குள்ள வலி ஆரோக்கியத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அதாவது சிறுநீர்ப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் கற்களை வெளியேற்ற உடல் முயற்சிக்கிறது. அந்த முயற்சியின் விளைவாக கற்கள் சிறுநீர்பாதையில் நகரும்பொழுது அதன் கூர்முனைகள் மூத்திரக்காயிலோ, வடிகுழாயிலே உரசும்போது கடுமையான வலி உண்டாகிறது. இந்நிலையில் அவருக்குள்ள வலியின் தன்மை, சிறுநீர்கழிக்கும் முறை அவருடைய அப்போதைய மனநிலை பிறகுறிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. உடல் முழு பலத்துடன் கற்களை வெளியேற்ற மருந்துகள் உதவுகின்றன. மேலும் வலியின் அதியுணர்ச்சியையும் மட்டுப்படுத்தி நோயாளியை அமைதிப்படுத்துகின்றன. “கற்கள் சத்தமில்லாமல் வெளியேறுகின்றன”.

ஹோமியோபதி மருந்துகள் : சிறுநீர்க்கற்களின் வலியை நீக்கவும், கற்களை வெளியேற்றவும், ஹோமியோபதியில் கீழ்காணும் மருந்துகள் பயன்படுகின்றன.

அர்ஜென்டம் நைட்ரிகம்,கல்கேரியா கார்பானிகா,லாச்சஸிஸ்,போடோபில்லம்,
டெரிபிந்தினா, பெல்லடோனா,சைனா,லைகோபோடியம்,பல்சட்டில்லா,
அர்டிகா யூரேன்ஸ்,பெர்பெரிஸ் வல்காரிஸ்.கோலோசிந்திஸ்,மெர்குரியஸ்,
சர்சபரில்லா,விராட்ரம் விரைடி, பிரையோனியா,டயஸ்கோரியா,நக்ஸ்வாமிகா,
செபியா,காந்தாரிஸ், ஹைட்ராஞ்ஜியா,நைட்ரிக்ஆசிட்,சாலிடாகோ,சாமோமில்லா,
ஹைடிராஸ்டிஸ், ஒசிமம் கானம்,டபாகம்.

ஒவ்வொருவரின் தனித்தன்மை, உடல்வாகு, நோய்க்குறிகள்,மனநிலை அனைத்தையும் அனுசரித்தே மருந்துகள் தேர்வு செய்து கொடுக்கப்படுகின்றன.

ஹோமியோபதி மருத்துவத்தின் பலன்கள் :

ஹோமியோ மருத்துவம் மென்மையானது, விரைவாகவும், நிரந்தரமாகவும் குணமளிக்கக்கூடியது, பக்கவிளைவுகள் அற்றது. பாதுகாப்பானது.

கல்லுடைக்கும் மருத்துவமனைகளில் ரூ,10,000 முதல் ரூ,50,000 வரை செலவாகிறது. ஹோமியோபதியில் ரூ. 200 முதல் ரூ.2,000 வரை மட்டுமே செலவாகிறது.

சிறுநீர்க்கற்களின் தன்மை, நோயாளியின் உயிராற்றல், உடல்வாகு, நோயின் நாட்பட்ட தன்மை ஆகியவற்றை பொருத்து சிகிச்சையின் கால அளவு மாறுபடும். சிறுநீர்க்கல்லின் தீவிர வலிக்கு சிகிச்சை பெறும் போது கற்கள் வெளியேறிய பின்பும், ஒரிருநாட்கள் மந்தமான வலி நீடிக்கலாம். 3-4 நாட்கள் தொடர்ந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. சிறுநீர்க்கல் சிகிச்சைக்குப்பின் தனித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் நோயாளிக்கு ஓரிரு வேளை மருந்து கொடுத்தால் கற்கள் மீண்டும் உருவாவதை தடுக்கமுடியும்.